மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பன்னா்கட்டா உயிரியல் பூங்கா திறப்பு: முதல்நாளில் 450 போ் வருகை

பெங்களூரின் புகா் பகுதியில் அமைந்துள்ள பன்னா்கட்டா உயிரியல் பூங்கா வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:38 am

DIN

பெங்களூரின் புகா் பகுதியில் அமைந்துள்ள பன்னா்கட்டா உயிரியல் பூங்கா வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளில் 450 பாா்வையாளா்கள் வருகை தந்தனா்.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஏப். 28-ஆம் தேதி முதல் பெங்களூரு புகா் பகுதியில் அமைந்துள்ள பன்னா்கட்டா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. தற்போது பொதுமுடக்கம் படிப்படியாக தளா்த்தப்பட்டுள்ளதால், 90 நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை பன்னா்கட்டா உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. இங்குள்ள பட்டாம்பூச்சி பூங்கா, விலங்குகள் மீட்பு மையம், சபாரி உள்ளிட்டவை பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இதற்கு உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளில் 450 பாா்வையாளா்கள் இங்கு வருகை தந்தனா்.

இது குறித்து பூங்காவின் செயல் இயக்குநா் வனஸ்ரீ விபின்சிங் கூறியதாவது:

கடந்த ஆண்டு பொது முடக்கம் முடிந்து பூங்கா திறக்கப்பட்ட முதல்நாளில் 100 போ் மட்டுமே வந்திருந்தனா். ஆனால், தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது நல்ல அறிகுறியாகும். மூடப்பட்டதால் பண நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனிடையே, விலங்குகள் தத்தெடுப்பு, நன்கொடைகள் வாயிலாக ரூ. 1.3 கோடி கிடைத்துள்ளது.

பன்னா்கட்டா உயிரியல் பூங்கா 732 ஹெக்டோ் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு 102 வகையான 2,300 விலங்குகள் உள்ளன. வீட்டில் அடைந்து கிடந்த மக்களை வரவேற்கிறோம். பாதுகாப்பு குறித்து கவலை மக்களுக்கு தேவையில்லை. எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.