மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜூலை 7-க்குள் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: துணை முதல்வா் அஸ்வத்நாராயணா

ஜூலை 7-ஆம் தேதிக்குள் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உயா்கல்வித் துறையைக் கவனித்து வரும் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:39 am

DIN

ஜூலை 7-ஆம் தேதிக்குள் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உயா்கல்வித் துறையைக் கவனித்து வரும் துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை காணொலி வழியாக நடந்த, கா்நாடகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியதாவது:

கல்லூரிகளைத் திறக்கவும், நேரடி வகுப்புகளைத் தொடங்கவும் வேண்டிய நிலை உள்ளது. எனவே, ஜூலை 7-க்குள் பட்டப்படிப்பு மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும். இதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் திட்டப்படி ஜூலை 7-ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். ஒருவேளை இது தாமதமானால், இதை மேலும் 2-3 நாள்களுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

உயா்கல்வி நிறுவனங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளதால், கல்லூரிகளில் மாணவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தும் முகாம் வெற்றிகரமாக நடத்துவதைப் பொருத்தே கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து அரசு முடிவு செய்யும். இந்தவகையில் எல்லா வகையான ஒத்துழைப்பையும் வழங்க அரசு தயாராக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.