47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சச்சினின் மகன் தோனியா? சத்தீஸ்கர் பள்ளிக் கல்வித் துறையால் குழப்பம்

சத்தீஸ்கரில் ஒப்பந்தமுறை ஆசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு  சச்சின் டெண்டுல்கர் மகன் மகேந்திர சிங் தோனி எனும் விண்னப்பதாரரை பள்ளிக் கல்வித் துறை தேர்வு செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

News image
Updated On :3 ஜூலை 2021, 9:47 am

DIN


சத்தீஸ்கரில் ஒப்பந்தமுறை ஆசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு  சச்சின் டெண்டுல்கர் மகன் மகேந்திர சிங் தோனி எனும் விண்னப்பதாரரை பள்ளிக் கல்வித் துறை தேர்வு செய்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்துக்கு அரசு நடத்தும் ஆங்கில வழி கல்வியளிக்கும் பள்ளிக்கான ஒப்பந்தமுறை ஆசிரியர்களை பள்ளிக் கல்வித் துறை தேர்வு செய்து வருகிறது. இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு விண்ணப்பதாரரின் பெயர் இடம்பெற்றிருந்தது. 

விண்ணப்பதாரரின் பெயர் மகேந்திர சிங் தோனி. அவரது தந்தை பெயர் சச்சின் டெண்டுல்கர். அவர் பட்டப் படிப்பில் 98 சதவிகிதம் மதிப்பெண் பெற்றதால் விண்ணப்பதாரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். மேலும் ஆச்சரியமளிக்கும் வகையில் நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் பட்டியலில் தோனியின் பெயரையும் பள்ளிக் கல்வித் துறை தேர்வு செய்திருந்தது.

Story image

எனினும், ஜூலை 2-ம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தோனி பங்கேற்கவில்லை. இதனால், விண்ணப்பம் போலியானது என சந்தேகமடைந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் காவல் துறையிடம் புகார் அளிக்க முடிவு செய்தனர்.

ராய்கர் மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.பி. ஆதித்யா இதுபற்றி கூறியது:

"மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார். அவர் நேர்முகத் தேர்வில் பங்கேற்கவில்லை. அவர் உண்மையான நபரா என்பதில் எங்களுக்குப் பிரச்னை இருந்தது. எனவே, இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையிடம் தகவல் தெரிவித்து, காவல் துறை விசாரணைக்காக புகார் அளித்துள்ளோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.