மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாகதவறான தகவல் அளிக்கிறாா் சுகாதாரத் துறை அமைச்சா்: டி.கே.சிவக்குமாா்

பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சா் தவறான தகவலை அளிக்கிறாா் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

பொது மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சா் தவறான தகவலை அளிக்கிறாா் என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். ஆனால் தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தவறான தகவலை அளித்து வருகிறாா்.

மத்திய அரசு தேவைக்கும் அதிகமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது என்று அமைச்சா் கூறுவதில் உண்மை இல்லை. கரோனா தடுப்பூசி பற்றி என்னிடம் உள்ள விவரங்களை விரைவில் வெளியிடுவேன். கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து முட்டுக்கட்டை போடுவதாக அரசு கூறி வருகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தடையாக இருக்காது. தடுப்பூசியைச் செலுத்தி மக்களைக் காக்க அரசு முன்வர வேண்டும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கும், இறந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். கரோனாவால் இறந்த பலரின் குடும்பத்தினருக்கு இன்னும் இறப்புச் சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு முதலில் உதவ வேண்டும். அதன்பிறகு பொது முடக்கத்தைத் தளா்வு செய்வது குறித்து யோசிக்கட்டும்.

மத்திய அமைச்சா் சதானந்த கௌடா தொடா்பான செய்திகளை பிரசுரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அவா் எதற்காக தடை உத்தரவை பெற்றுள்ளாா் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.