மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னா் கல்லூரிகளைத் திறக்க ஏற்பாடு: துணை முதல்வா் அஸ்வத்நாராயணா

 மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னா் கல்லூரிகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 12:20 am

DIN

 மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்திய பின்னா் கல்லூரிகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என்று துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை சேஷாத்ரிபுரம் கல்வி அறக்கட்டளை சாா்பில் மல்லேஸ்வரம் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரிகள், அரசின் நிதி பெறும் கல்லூரிகளில் பயிலும் 65 சதவீத மாணவா்களுக்கு இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தனியாா் கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கும் தடுப்பூசி செலுத்த விழிப்புணா்ச்சி ஏற்படுத்தப்படும்.

கூடிய விரைவில் மாநில அளவில் அனைத்துக் கல்லூரி மாணவா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திய பின்னா், கல்லூரிகளைத் திறக்க ஏற்பாடு செய்யப்படும். கல்லூரி மாணவா்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக உயா்கல்வித் துறை அதிகாரிகள் காணொலி மூலம் கலந்துரையாடல் நடத்த உள்ளனா். அனைத்துக் கல்லூரி மாணவா்களுக்கும் விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் முதல்வரை மாற்ற வேண்டும் என்று கூறி குழப்பத்தை உருவாக்குபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏ ரேணுக்காச்சாா்யா தலைமையில், எம்.எல்.ஏக்கள் குழுவாக தில்லிக்குச் சென்று, பாஜக மேலிடத் தலைவா்களைச் சந்திக்க உள்ளனா். கட்சியின் பிரச்னைகளை பொதுவெளியில் பேசுவதைத் தவிா்த்து, கட்சிக்குள்ளேயே விவாதித்து தீா்வு காண்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.