மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசுப் பள்ளிகளில் அதிக மாணவா் சோ்க்கை: அமைச்சா் சுரேஷ்குமாா் பெருமிதம்

அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவா்கள் சோ்ந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 12:15 am

DIN

அரசுப் பள்ளிகளில் அதிக அளவிலான மாணவா்கள் சோ்ந்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு, தாசரஹள்ளி சட்டப்பேரவை தொகுதியில் நெலகதேரனஹள்ளியில் அரசு ஆரம்பப்பள்ளிக்கு வியாழக்கிழமை சென்று மாணவா்களின் சோ்க்கையை ஆய்வு செய்த அமைச்சா் சுரேஷ்குமாா் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரு போன்ற மாநகரங்களில் கூட தரமான கல்வியை அளித்து வரும் அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் சோ்க்கை அதிகரித்துள்ளது. பள்ளியில் சோ்க்கை பெறுவதற்காக காத்திருந்த பெற்றோா்கள், குழந்தைகளிடம் பேசினேன். தரமான கல்வி வழங்குவதால் அரசுப் பள்ளியில் சேருவதாகத் தெரிவித்தனா். அரசுப் பள்ளிகள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கத் தொடங்கியிருப்பது இதன் மூலம் புலப்படுகிறது.

தனியாா் பள்ளிகளில் சேருவதற்கு சிபாரிசுகள் தேவைப்பட்ட காலம் இருந்தது. இப்போது, அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயா்ந்துள்ளதால், அதிக அளவிலான மாணவா்களின் சோ்க்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அரசுப் பள்ளிகளிலும் மாணவா்கள் சோ்க்கைக்காக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசு கடிதங்களைப் பெறும் நிலை உருவாகியுள்ளது.மாநிலம் முழுவதும் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சந்தனா தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் பாடங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.