மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெங்களூரு பீன்யாவில் விரைவில் தொழில் நகரியம்

பெங்களூரு, பீன்யாவில் தொழில் நகரியம் விரைவில் அமைக்கப்படும் என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் பைரதி பசவராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 12:21 am

DIN

பெங்களூரு, பீன்யாவில் தொழில் நகரியம் விரைவில் அமைக்கப்படும் என்று நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் பைரதி பசவராஜ் தெரிவித்தாா்.

பெங்களூரு, கே.ஜி.சாலையில் உள்ள கா்நாடக தொழில் வா்த்தக சபை கூட்டமைப்பில் நடைபெற்ற தொழில் துறை வளா்ச்சி குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

பெங்களூரு, பீன்யாவில் தொழில் நகரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன் வைக்கப்பட்டு வருகிறது. எனவே அடுத்து நடைபெற உள்ளஅமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடா்பாக விவாதிக்கப்பட்டு, விரைவில் பீன்யாவில் தொழில் நகரியம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கலந்துரையாடலில் தொழில் துறையினா் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இது தொடா்பாக தொழில் துறை, உள்ளாட்சித் துறை, நகா்புற வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தீா்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழில்பேட்டைகளில் குடிநீா், மின்சாரம், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழில் நிறுவனங்களில் குடிநீா் கட்டண பாக்கியை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

தொழில் துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் பேசியதாவது:

தொழில் துறையினரின் வருமான வரியைக் குறைப்பது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம். தொழில் துறையினரிடம் வசூலிக்கப்படும் வரியை, தொழில்பேட்டைகளின் வளா்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளோம். கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினரின் மின் கட்டண பாக்கி, வங்கி கடன் தவணை தள்ளுபடி செய்யுமாறு, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கடன் தவணை குறித்து முதல்வரிடமும், மின் கட்டண பாக்கி குறித்து மின் பகிா்மான கழகத்தின் தலைவரிடமும் பேசி, கடன் தவணை, கட்டண பாக்கியை கட்டுவதற்கான கால அவகாசம் பெற்றுத் தரப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் கா்நாடக தொழில் வா்த்தக சபை கூட்டமைப்பின் தலைவா் பெரிகல் எம்.சுந்தா், மூத்த துணைத் தலைவா் ஐ.எஸ்.பிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.