மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஹிமாச்சல் பேரிடர்: மீட்புப் பணிகளில் உதவுவதாக அமித் ஷா உறுதி

ஹிமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்குருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். 

News image
அமித் ஷா / ஜெய் ராம் தாக்குர்
Updated On :12 ஜூலை 2021, 10:58 am

DIN


ஹிமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்குருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புகொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். 

மேலும், பேரிடர் மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளையும் உள்துறை அமைச்சகம் செய்து கொடுக்கும் என்றும் உறுதி அளித்தார். 

இது தொடர்பாக தமது சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ’’தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்குருடன் தொலைபேசி வாயிலாக பேசி நிலைமையை கேட்டறிந்தேன்.

ஹிமாச்சலில் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவில் அனுப்பப்படும். ஹிமாச்சலின் நிலைமையை உள் துறை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது’’ என்று பதிவிட்டுள்ளார். 

ஹிமாச்சலில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சமதளமற்ற மலைப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

கங்ரா மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஆறு வீடுகள் சேதமடைந்தன. இதில் 10-க்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகளில் மாநில பேரிடர் மீட்புப் படை களமிறக்கப்பட்டுள்ளது.

மேலும், தர்மசாலா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான வாகனங்கள் நீரில் மூழ்கின. ஏராளமான கார், இருசக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.