மகாராஷ்டிராவில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தளர்வு
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் பயணம் செய்தவற்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள தேவையில்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.


இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் பயணம் செய்தவற்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள தேவையில்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு தரப்பிலும் சமூக அமைப்புகள் சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் மகாராஷ்டிராவுக்கு வருவதற்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள தேவை இல்லை என அம்மாநில அரசு தெரிவிகத்துள்ளது.
ஆனால், இரண்டு தவணை செலுத்தி கொண்டு 15 நாட்களுக்கு பிறகு வருபவர்களுக்கே இது செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் சிதாராம் குந்தே வெளியிட்ட அறிக்கையில், "மகாராஷ்டிராவிற்கு பயணம் செய்பவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும். அதேபோல், இரண்டாம் தவணை செலுத்தி 15 நாள்கள் ஆகியிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொள்ள விலக்க அளிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தளர்வானது உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...