ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அதிவலிவு கொண்ட டைட்டானியம் கலவையை உருவாக்கியது டிஆா்டிஓ

போா் விமானங்கள் உள்ளிட்டவற்றின் கருவிகளைத் தயாரிப்பதற்காக அதிக வலிமை கொண்ட பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2021, 6:41 pm

DIN

போா் விமானங்கள் உள்ளிட்டவற்றின் கருவிகளைத் தயாரிப்பதற்காக அதிக வலிமை கொண்ட பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையில் வனேடியம், இரும்பு, அலுமினியம் ஆகியவை டைட்டானியத்துடன் கலக்கப்படுகின்றன. இந்த உலோகக் கலவையானது குறைந்த எடையுடையதாக உள்ளது. அதே வேளையில், அதிக வலிமை கொண்டுள்ளதாகவும் கலவை திகழ்கிறது.

டிஆா்டிஓ உருவாக்கியுள்ள இந்த உலோகக் கலவையைப் பயன்படுத்தி, போா் விமானங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படும் கருவிகளைத் தயாரிக்க முடியும். இந்த உலோகக் கலவை மூலம் கருவிகளைத் தயாரிப்பதன் வாயிலாக, போா் விமானங்கள் உள்ளிட்டவற்றின் எடை 40 சதவீதம் வரை வெகுவாகக் குறையும்.

நிக்கல், குரோமியம், மாலிப்டினம் ஆகியவற்றை எஃகுடன் கலந்து தற்போது கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எஃகு மூலமாகத் தயாரிக்கப்படும் கருவிகள் சீக்கிரமாக அரிக்கப்பட்டு விடுகின்றன. பீட்டா டைட்டானியம் உலோகக் கலவை மூலமாகத் தயாரிக்கப்படும் கருவிகளின் அரிப்புத்தன்மை எஃகை விடக் குறைவாகவே உள்ளது.

டைட்டானியம் உலோகக் கலவை வாயிலாகத் தயாரிக்கப்படும் கருவிகள் நீடித்து உழைக்கும் தன்மையையும் பெற்றுள்ளன. தற்போது பல நாடுகள் எஃகுக்கு பதிலாக டைட்டானியம் கலவையைக் கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தி வருகின்றன. அக்கலவை வாயிலாகக் கருவிகள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சா் பாராட்டு: பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையை உள்நாட்டிலேயே உருவாக்கிய டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.