இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

‘கட்சி மேலிடத்திலிருந்து எந்த நெருக்கடியும் இல்லை’: எடியூரப்பா பேட்டி

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய கட்சி மேலிடம் நெருக்கடி செய்யவில்லை என ராஜிநாமா செய்த பிறகு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

News image
எடியூரப்பா பேட்டி
Updated On :26 ஜூலை 2021, 7:48 am

DIN

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய கட்சி மேலிடம் நெருக்கடி செய்யவில்லை என ராஜிநாமா செய்த பிறகு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாடை ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை இன்று எடியூரப்பா வழங்கினார்.

இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா கூறியதாவது,

“இரண்டு ஆண்டுகள் முதல்வராக பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்ற போது இரண்டு ஆண்டுகளில் ராஜிநாமா செய்வேன் என்று அளிக்கப்பட்ட உறுதியை நிறைவேற்றியுள்ளேன். ராஜிநாமா செய்யும் முடிவை தனது விருப்பப்படி தான் எடுத்துள்ளேன். கட்சி மேலிடம் எந்த நெருக்கடியும் தரவில்லை. 

கர்நாடகாவை 17 ஆண்டுகள் ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

மேலும், ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தொடர்ந்து கர்நாடக மக்களின் நலனுக்காக செயல்படவுள்ளதாக பதிலளித்தார்.

2019-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி நான்காவது முறையாக எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. இன்றுடன் (ஜூலை 26) முதல்வராக பதவியேற்று 2 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில், முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

பாஜகவில் 75 வயதைக் கடந்தவா்கள் முக்கிய பதவிகளில் இருந்து விலகியிருக்கும் விதிமுறை உள்ளது. இந்நிலையில், எடியூரப்பாவுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை, பலர் எதிர்த்து வந்தனர். 

இதையடுத்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சித் தலைவர் நட்டா உள்ளிட்டோரை கடந்த வாரம் தில்லியில் சந்தித்து பேசிய எடியூரப்பா இந்த முடிவை எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.