சென்னை: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,689 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 42,363 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 415 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 3,06,21,469 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,21,382 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி இன்னும் 3,98,100 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்
தடுப்பூசி:
நாட்டில் இதுவரை மொத்தம் 44,19,12,395 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.