ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளன: மத்திய அரசு
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் புதன்கிழமை தெரிவித்தார்.


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் புதன்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீரின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்த விவரங்களை கேட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் பதிலளித்துள்ளார்.
“ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் எண்ணிக்கை 32 சதவீதம் குறைந்துள்ளது. கடைகள், வணிக செயல்பாடுகள், பொதுப் போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் இயல்பு நிலையில் செயல்பட்டு வருகின்றது.
தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்துதல் மற்றும் பயங்கரவாத அமைப்பினரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் செல்லாமல் இருக்க வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.”
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...