மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆகஸ்ட் 15-க்குள் பிகார் முதல்வராகிறாரா தேஜஸ்வி? ஆர்ஜேடி எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

​ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தான் ஆகஸ்ட் 15-இல் பாட்னாவில் தேசியக் கொடி ஏற்றுவார் என அக்கட்சியின் எம்எல்ஏ பாய் விரேந்திரா கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :28 ஜூலை 2021, 3:30 pm

DIN


ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தான் ஆகஸ்ட் 15-இல் பாட்னாவில் தேசியக் கொடி ஏற்றுவார் என அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான பாய் விரேந்திரா கூறியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தது:

"ஆகஸ்ட் 15-ம் தேதி தேஜஸ்வி யாதவ் தான் தேசியக் கொடியை ஏற்றுவார். தற்போது நான் கூறியது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பாட்னா காந்தி திடலில் தேஜஸ்வி யாதவ் முதல்வராக தேசியக் கொடி ஏற்றுவார். இது உண்மையாகப் போகிறது. ஊடகங்கள் அதற்காக காத்திருக்க வேண்டும்.  

ஐக்கிய ஜனதா தளம் பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்துள்ளது" என்றார் அவர். 

பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விகாஸ் ஷீல் இன்சான் மற்றும் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சிகளின் 8 எம்எல்ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரச்னைகளும் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு நாள்களுக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தை விகாஸ் ஷீல் இன்சால் கட்சித் தலைவர் புறக்கணித்தார்.

ஆளும் கூட்டணியில் இதுபோன்ற பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏ இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் இது உஷார்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.