மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கொலை செய்யப்பட்டாரா நீதிபதி? சிசிடிவி வெளியாகி பரபரப்பு

ஜார்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதியை வாகனம் ஏற்றி கொன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image
சிசிடிவி காட்சி
Updated On :29 ஜூலை 2021, 12:05 pm

DIN

ஜார்க்கண்டில் கூடுதல் மாவட்ட நீதிபதியை வாகனம் ஏற்றி கொன்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் நீதிபதி ஒருவர் விபத்தில் சிக்கி பலியானதாக செய்தி வெளியானது. ஆனால், இதுகுறித்து வெளியான சிசிடிவி காட்சி வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். 

அப்போது, சாலையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த அவர் மீது வாகன ஓட்டி உள்நோக்கத்துடன் இடித்து விபத்துக்குள்ளாக்கினார். பின்னர், சம்பவ இடத்திலிருந்து வாகனம் சென்றுவிட்டது.

பின்னர், ரத்த வெளத்தில் கிடந்த நீதிபதியை சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் உயிரிழந்தார். அடையாளம் தெரியாமலேயே நீதிபதியின் உடல் மருத்துவமனையில் பல மணி நேரம் கிடந்துள்ளது. நீதிபதியை காணவில்லை என அவரின் குடும்பத்தார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நீதிபதி உயிரிழந்தது தெரியவந்தது. நீதிபதியின் மீது வாகனம் மோதுவது போன்ற சிசிடிவி விடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விடியோவை ஆதாரமாக கொண்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை இயக்குநர் அமோல் வினுகாந்த் கூறுகையில், "லகான் குமார் வர்மா, ராகுல் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றத்தை செய்ததாக அவர்கள் இருவர் ஒப்புக் கொண்டனர்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.