மகாராஷ்டிரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஓரிரு நாள்களில் முடிவு
மகாராஷ்டிரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிரத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, பிளர்ஸ் 2 பொதுத்தேர்வு குறித்த திட்ட வரைவு தேசிய பேரிடர் மேலாண்மைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர்கள் ஆலோசனை மேற்கொள்வார்கள். அதன் பிறகு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாள்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.
கரோனா காரணமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு நேற்று (ஜூன்1) அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...