மெஹுல் சோக்ஸியை அழைத்து வர ஜெட் விமானம் அனுப்பியது இந்தியா

தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அவரை நாட்டுக்கு திரும்ப அழைத்துவர வசதியாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானத்தை இந்தியா அனுப்ப
மெஹுல் சோக்ஸியை அழைத்து வர ஜெட் விமானம் அனுப்பியது இந்தியா
மெஹுல் சோக்ஸியை அழைத்து வர ஜெட் விமானம் அனுப்பியது இந்தியா
Published on
Updated on
1 min read

தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க டொமினிகா நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அவரை நாட்டுக்கு திரும்ப அழைத்துவர வசதியாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானத்தை இந்தியா அனுப்பியுள்ளது.

தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை நாட்டுக்கு அழைத்து வர வசதியாக அவருக்கு எதிராக ஆவணங்களுடன் புது தில்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கத்தார் ஜெட் விமானம் கடந்த மே 28-ஆம் தேதி அதிகாலை டெமினிகாவுக்கு அனுப்பி வைத்திருக்கும் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

முன்னதாக, தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை, நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரை இந்தியா அழைத்துவர சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு அந்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த தொழிலதிபா்கள் நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா். இருவரையும் இந்தியாவுக்கு திரும்ப அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே 23-ஆம் தேதி ஆன்டிகுவாவில் இருந்து மெஹுல் சோக்ஸி காணாமல் போனாா்.

அண்டை நாடான டொமினிக்காவில் தனது தோழியுடன் இருந்தபோது அவா் பிடிபட்ட நிலையில், அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீதான வழக்கு டொமினிக்கா நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மெஹுல் சோக்ஸியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டும், பிணையில் விடுவிக்கப்பட்டாலும், இங்கிருந்து நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்வேன் என்று சோக்ஸி தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏற்க முடியாததாலும், பிணையில் விடுதலை செய்ய முடியாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற விசாரணையில், மெஹுல் சோக்ஸியை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரை இந்தியா அழைத்துவர சிபிஐ டிஐஜி தலைமையில் அந்த அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அந்நாட்டுக்குச் சென்றிருக்கும் நிலையில், ஜெட் விமானமும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com