

பிளஸ் 2 செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 28-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
மேலும் நடத்தப்படாமல் வைக்கப்பட்டுள்ள செய்முறைத் தேர்வுகளை இணைய வழியாக மட்டும் நடத்தி முடிக்கவும் சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த வாரம் (ஜூன்2) மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தனர்.
இதனை அடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையை வகுப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க 12 போ் கொண்ட குழுவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அமைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.