புதுதில்லி: தெலங்கானாவின் சீதாரம்பூரில் 5.6 ஜிகாவாட் திறன் கொண்ட சூரிய மின்தகடு உற்பத்தி ஆலையை தொடங்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது பிரீமியர் எனர்ஜீஸ் நிறுவனம்.
75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, சுமார் 2,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், அதே வேளையில், உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தி, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி உற்பத்திச் சூழலை வலுப்படுத்தும்.
இந்தத் விரிவாக்க திறன் மூலம், பிரீமியர் எனர்ஜீஸின் மொத்த சூரிய மின்தகடு உற்பத்தித் திறன் தற்போது 11.1 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
இந்த ஆலையில் ஒவ்வொரு 16 வினாடிகளுக்கும் 4 - ஜி12ஆர் உயர் செயல்திறன் கொண்ட மின்தகடுகளை உற்பத்தி செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழுமையான ஒருங்கிணைந்த சூரிய உற்பத்திச் சூழலமைப்பை நோக்கிய எங்கள் பயணத்தில், இந்த உயர் தொழில்நுட்ப ஆலையை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிரஞ்சீவ் சலுஜா.
Summary
Premier Energies on Tuesday said it has commissioned its 5.6 GW solar module manufacturing facility at Seetharampur, Telangana.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் டொயோட்டாவின் புதிய ஆலை!

சூரிய சக்தியில் சென்னை ரயில்வே கோட்டம் 23.15 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி

தமிழகத்தில் 8.5 ஜிகாவாட் சூரியசக்தி மின்உற்பத்தி

கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் ஆபரேட்டா் பணி: விண்ணப்பிக்க அழைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




