டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரயில் முன் குதித்த முதியவர்: ரயிலை நிறுத்தி உயிரைக் காத்த ஓட்டுநர்

தாணே மாவட்டம் வித்தல்வாடி ரயில் நிலையத்துக்கு அருகே, ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 79 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் மத்திய ரயில்வேயில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர். 

News image
ரயில் முன் குதித்த முதியவர்: ரயிலை நிறுத்தி உயிரைக் காத்த ஓட்டுநர்
Updated On :7 ஜூன் 2021, 11:12 am

PTI


தாணே: தாணே மாவட்டம் வித்தல்வாடி ரயில் நிலையத்துக்கு அருகே, ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற 79 வயது முதியவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் மத்திய ரயில்வேயில் பணியாற்றும் ரயில் ஓட்டுநர். 

தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் குதித்தைப் பார்த்த ஓட்டுநர், அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்யாண் பகுதியைச் சேர்ந்த முதியவர், ரயில் நிலையத்துக்கு வந்து, ரயில் வந்து கொண்டிருந்த போது அந்த தண்டவாளத்தில் குதித்துள்ளார். ஆனால் புத்திசாலித்தனமாக, ரயில் ஓட்டுநர் பிரேக் போட்டு நிறுத்தி தற்கொலையை தடுத்துள்ளார்.

உடனடியாக அவரது குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அந்த முதியவர் மகனுடன் அனுப்பி வைக்கப்பட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.