கரோனாவை வெற்றி கண்ட தாராவி: 2வது நாளாக புதிய பாதிப்பில்லை

கரோனா இரண்டாவது அலைகளுக்கு இடையே, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலிருந்து ஒரு நல்ல செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.
கரோனாவை வெற்றி கண்ட தாராவி: 2வது நாளாக பாதிப்பில்லை
கரோனாவை வெற்றி கண்ட தாராவி: 2வது நாளாக பாதிப்பில்லை
Published on
Updated on
1 min read

புது தில்லி: கரோனா இரண்டாவது அலைகளுக்கு இடையே, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியிலிருந்து ஒரு நல்ல செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.

அதாவது, மும்பையில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில், இரண்டாவது நாளாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து மும்பை மாநகராட்சி தகவல் வெளியிட்டுளள்து. அதில், மும்பையின் தாராவி பகுதியில் இன்று இரண்டாவது நாளாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிக்கப்படவில்லை. அதேவேளையில், கரோனா பாதித்து சிகிச்சையிலிருப்போரின் எண்ணிக்கையும் 11 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை தாராவியில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,861 ஆக உள்ளது.

கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதிக்குப் பிறகு தாராவில் திங்களன்று முதல் முறையாக கரோனா பாதிப்பு பதிவாகாத நிலையில், செவ்வாயன்றும் அதே நிலை நீடித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com