பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘யாஸ் புயல் பாதிப்பிற்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை’: மம்தா குற்றச்சாட்டு

யாஸ் புயலுக்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

News image
‘யாஸ் புயல் பாதிப்பிற்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை’: மம்தா குற்றச்சாட்டு
Updated On :17 ஜூன் 2021, 10:25 am

DIN

யாஸ் புயலுக்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

மத்திய கிழக்கு வங்க கடலில் யாஸ் என்று பெயரிடப்பட்ட புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.

புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ரூ. 600 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, மேற்கு வங்கத்திற்கு ரூ. 400 கோடியை ஒதுக்கியது.

மேலுன் யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு தலா ரூ.500 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. 

இந்நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “யாஸ் புயல் பாதிப்பிற்குப் பின் மத்திய அரசு அறிவித்த எந்த நிவாரணத் தொகையையும் இதுவரை வழங்கவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.

மேலும் டிவிட்டர் நிறுவனம் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் டிவிட்டர் நிறுவனத்தை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் அதனை சிதைக்க முயற்சித்து வருகின்றனர். இதேபோல் தான் அவர்கள் எங்கள் அரசைக் கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் அது நடக்காது. மத்திய அரசு இந்தப் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.