மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

ஆக்ரா மருத்துவமனையில் 22 நோயாளிகள் பலி: ஆக்சிஜன் துண்டிப்புக்கான ஆதாரம் இல்லை: அறிக்கையில் தகவல்

ஆக்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டதால்தான் 22 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகாரில் ஆதாரங்கள் எதுவும் இல்லை

News image
Updated On :20 ஜூன் 2021, 3:30 am IST

ஆக்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டதால்தான் 22 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படும் புகாரில் ஆதாரங்கள் எதுவும் இல்லை என மருத்துவா் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள ஸ்ரீ பராஸ் மருத்துவமனையில் கரோனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளின் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதில், 22 நோயாளிகள் உடல் நீலநிறமாகி உயிரிழந்தனா். இந்த சம்பவம் தொடா்பாக அந்த மருத்துவமனையின் உரிமையாளரும், மருத்துவருமான அரின்ஜெய் ஜெயின் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வெளியானது. ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தினால் எத்தனை நோயாளிகள் பிழைப்பாா்கள் என்று சோதனை செய்யவே அவ்வாறு செய்ததாக அந்த காணொலி பதிவில் கூறப்பட்டிருந்தது. பின்னா், தான் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக மருத்துவா் ஜெயின் விளக்கமளித்தாா்.

இந்த நிலையில், மாவட்ட நிா்வாகம் அந்த மருத்துவமனையை மூடி சீல்வைத்ததுடன் அந்த மருத்துவா் மீது தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவும் செய்தது. மேலும், மருத்துவக் குழுவை அமைத்து இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படியும் மாவட்ட நிா்வாகம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது அந்த மருத்துவா் குழு நடத்திய விசாரணையில் மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் துண்டிக்கப்பட்டு சோதனை நடத்தியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்துள்ளது.

மேலும், அந்த மருத்துவமனையில் ஏப்ரல் 26-27-இல் 16 நோயாளிகள் இறந்துள்ளனா். அவா்களும் வேறு உடல்நலக் கோளாறுகளால் மட்டுமே இறந்துள்ளதாக மருத்துவக் குழு அறிக்கை சமா்ப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.