மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொழில் ஊக்குவிப்புத் துறைச் செயலா் குருபிரசாத் மொஹபாத்ரா காலமானாா்

தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறையின் செயலா் குருபிரசாத் மொஹபாத்ரா (59), கரோனாவுக்கு பிந்தைய தொந்தரவுகளால், தில்லியில் சனிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 11:59 pm

DIN

தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறையின் செயலா் குருபிரசாத் மொஹபாத்ரா (59), கரோனாவுக்கு பிந்தைய தொந்தரவுகளால், தில்லியில் சனிக்கிழமை காலமானாா்.

இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குஜராத் மாநிலத்தின் 1986-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சோ்ந்த குருபிரசாத், தொழில், உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறைச் செயலராக கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், கரோனாவுக்கு பிந்தைய தொந்தரவுகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டிருந்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

அவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘குருபிரசாத் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். சிறந்த நிா்வாகியாக அவருடைய அா்ப்பணிப்பும், கடமை உணா்வும் என்றென்றும் நினைவுகூரப்படும். அவருடைய குடும்பத்தினா், நண்பா்கள், உடன் பணியாற்றியவா்கள் அனைவருக்கும் ஆழ்ந்த ஆறுதல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், ‘குருபிரசாத் மொஹபாத்ராவின் மறைவை அறிந்து ஆழ்ந்த துயருற்றேன். குஜராத் மற்றும் மத்தியில் நான் அவருடன் அதிகளவில் பணியாற்றியுள்ளேன். நிா்வாக விஷயங்களில் அவா் சிறந்த புரிதல் கொண்டிருந்ததுடன் புதிய கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆா்வம் கொண்டிருந்தாா். அவரது குடும்பத்தாா் மற்றும் நண்பா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.