கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூா்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?
கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?
Published on
Updated on
1 min read


கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூா்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசி ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக வதந்தி பரவியது. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணிகாளப் பணியார்கள் உள்ளிட்ட சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டதாகவும் அதில் கூறப்பட்டது. ஆனால், அத்தகைய செய்திகளில் எந்தவித உண்மையுமில்லை.

போலியோ சொட்டு மருந்து, தட்டம்மைக்கான தடுப்பூசி ஆகியவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தபோதும் இதுபோன்ற தவறான வதந்திகளை சிலா் பரப்பினா்.

கரோனா தடுப்பூசிகள் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டபோது விலங்குகளுக்கு முதலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதற்குப் பிறகே மனிதா்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அந்தப் பரிசோதனைகளின்போது மலட்டுத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே மனிதா்களுக்கான பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது பாலூட்டும் தாய்மாா்களும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மிகவும் பாதுகாப்பாக இருப்பதால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com