வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம்: 'மத்திய அரசு நிராகரித்தது'
தில்லி அரசின் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.


தில்லி அரசின் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்ததாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எந்தவொரு மாதிரி திட்டத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காத நிலையில், மத்திய அரசு இத்திட்டத்தை நிராகரித்துள்ளதாக கூறினார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, செவ்வாய்க் கிழமை மத்திய அரசிடமிருந்து தில்லி அரசுக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில் தில்லி அரசின் வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கும் திட்டத்தை நிராகரிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் குறித்து ஏந்தவித ஒப்புதலுக்காகவும் மத்திய அரசுக்கு எதையும் தில்லி அரசு அனுப்பிவைக்கவில்லை. இந்நிலையில், இத்திட்டத்தை மத்திய அரசு தாமாக முன்வந்து நிராகரித்துள்ளது என்றும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...