பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மகாராஷ்டிரத்தில் 3 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

நாட்டில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரத்தில் 3 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் 3 கோடி தடுப்பூசிகள்
Updated On :25 ஜூன் 2021, 10:08 am

DIN

நாட்டில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரத்தில் 3 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் நாட்டில் அதிக பாதிப்பை கண்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ள நிலையில், அதிக தடுப்பூசிகள் செலுத்தும் மாநிலமாக மாறியுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, மாநிலத்தில் 3,00,27,217 தவணை தடுப்பூசிகளை கடந்து செலுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி பிரதீப் வியாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், 3 கோடி என்ற இலக்கை எட்டிய முதல் மாநிலமாகவும் மகாராஷ்டிரம் உருவெடுத்துள்ளது.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. முன்களப் பணியாளர்கள், வயதுடையோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என பல கட்டங்களை கடந்து நாட்டில் இதுவரை 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.