ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தில்லியில் புதிதாக 85 பேருக்கு மட்டுமே கரோனா

தில்லியில் புதிதாக 85 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவே குறைந்தபட்ச தினசரி பாதிப்பு.

News image

கோப்புப்படம்

Updated On :26 ஜூன் 2021, 1:23 pm

DIN


தில்லியில் புதிதாக 85 பேருக்கு மட்டுமே கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் இதுவே குறைந்தபட்ச தினசரி பாதிப்பு.

தில்லி கரோனா நோய்த் தொற்று தரவுகள் சுகாதாரத் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 72,920 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 85 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.12 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. 

இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,33,675 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 158 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 14,07,116 பேர் குணமடைந்துள்ளனர். 24,961 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 1,598 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.