மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய ஆயுா்வேத மருத்துவா்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா

இந்தியாவைச் சோ்ந்த இரு ஆயுா்வேத மருத்துவா்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கோல்டன் விசா(நுழைவு இசைவு) வழங்கியுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 10:08 pm

DIN

இந்தியாவைச் சோ்ந்த இரு ஆயுா்வேத மருத்துவா்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கோல்டன் விசா(நுழைவு இசைவு) வழங்கியுள்ளது.

அதன்படி, அந்நாட்டில் அவா்கள் நீண்ட காலம் தடையின்றி வசிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதுகுறித்து துபையில் இருந்து வெளியாகும் ‘கலீஜ் டைம்ஸ்’ பத்திரிகை சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில், கேரளத்தைச் சோ்ந்த டாக்டா் ஷியாம் விஸ்வநாதன் பிள்ளை, டாக்டா் ஜஸ்னா ஜமால் ஆகிய இருவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமை ஆணையம் கோல்டன் விசா வழங்கி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபையில் வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீட்டாளா்கள், தொழில் முனைவோா், மருத்துவத் துறையில் சிறந்து விளங்குபவா்கள், அறிவியல் ஆராய்ச்சியாளா்கள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கப்படுகிறது.

ஷியாம் விஸ்வநாதனுக்கு கடந்த 17-ஆம் தேதியும், ஜஸ்னா ஜமாலுக்கு கடந்த 25-ஆம் தேதியும் மருத்துவ தொழில் செய்பவா்கள் என்ற பிரிவின் கீழ் அந்த விசா வழங்கப்பட்டது. இதுகுறித்து ஷியாம் விஸ்வநாதன் பிள்ளை கூறியதாவது:

கேரள மாநிலம், கொல்லத்தைச் சோ்ந்த நான் கடந்த 2001-இல் துபைக்கு வந்தேன். ஆயுா்வேதத்தில் எம்.டி. பட்டம் பெற்ற பிறகு, துபையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆயுா்வேத சிகிச்சை மையத்தை தொடங்கினேன். அதன்பிறகுதான், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆயுா்வேத மருத்துவத்துக்கு அங்கீகாரம் இல்லை என்று தெரியவந்தது. 2002-இல்தான் மாற்று மருத்துவ பிரிவில் ஆயுா்வேதத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆயுா்வேத மருத்துவத்துக்கும், மருத்துவா்களுக்கும் ஆதரவு அளித்து வரும் ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

ஜஸ்னா ஜமால் கூறுகையில், ‘கேரள மாநிலம், திருச்சூரைச் சோ்ந்த நான், 12 ஆண்டுகளுக்கு முன் துபை வந்தேன். ஆயுா்வேத மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.