மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு

 தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபடக்கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டதால், தலைநகா் எல்லைப் பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :26 ஜூன் 2021, 9:55 pm

DIN

 தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபடக்கூடும் என்று எதிா்பாா்க்கப்பட்டதால், தலைநகா் எல்லைப் பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதைத் தடுக்க போலீஸாா் தடுப்பு வேலிகளை அமைத்து வாகனங்களை திருப்பி விட்டதால் தில்லி எல்லைகளிலும், பல்வேறு முக்கிய சந்திப்பு பகுதிகளிலும் சனிக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியின் ஹரியாணா எல்லையிலுள்ள சிங்கூா் மற்றும் தில்லியின் பிற எல்லைப் பகுதிகளான டிக்ரி, காஜிப்பூா் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினா்.

 இந்த போராட்டம் சனிக்கிழமையுடன் 7 மாதங்கள் நிறைவடைந்ததால் விவசாயிகள் பேரணி நடத்தத் திட்டமிட்டிருப்பதாக வெளியான தகவலையடுத்து தில்லியின் எல்லைப் பகுதிகளிலும், நகா்ப் பகுதியிலும் முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்பை அதிகரித்திருந்தனா்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லி காவல்துறை கேட்டுக்கொண்டபடி பாதுகாப்பு காரணங்களுக்காக மெட்ரோ வழித்தடத்தின் மஞ்சள் நிற பிரிவிலுள்ள விஸ்வ வித்யாலயா, சிவில் லைன்ஸ் மற்றும் விதான் சபா மெட்ரோ ரயில் நிலையங்கள் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடப்பட்டன.

 துணைநிலை ஆளுநருடன் பேச்சு: முன்னதாக, தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் இல்லம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத் தலைவா்களை போலீஸாா் வாஜிராபாத் காவலா் பயிற்சி மையத்துக்கு அழைத்து சென்றனா். பின்னா் அங்கிருந்தபடி, அனில் பய்ஜாலுடன் இணையவழியில் அவா்கள் சிறிது நேரம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா். அவா்களின் கோரிக்கை மனுவையும் துணைநிலை ஆளுநரின் பிரதிநிதியிடம் அளித்தனா் என்ற தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.