பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆந்திரத்தில் காலை 6 முதல் இரவு 9 வரை தளர்வுகள்: அரசு அறிவிப்பு

ஆந்திரத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஜூன் 2021, 10:28 am

DIN

ஆந்திரத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் ஆந்திரத்தில் மே 5-ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் 8 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

இந்த தளர்வுகள் ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. இதனால் இந்த தளர்வை ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 

மதுபானக் கடைகள் மற்றும் உணவகங்கள் போன்றவை இரவு 9 மணிக்கு பிறகு திறக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.