புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கட்டாய மத மாற்றத்திற்காக 2 சீக்கிய பெண்கள் கடத்தல்: ஜம்மு-காஷ்மீரில் போராட்டம்

ஜம்மு-காஷ்மீரில் சீக்கிய பெண்கள் இருவரைக் கடத்தி திருமணத்திற்காக கட்டாய மத மாற்றம் செய்த சம்பவத்தைக் கண்டித்து சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
கட்டாய மத மாற்றத்திற்காக சீக்கிய பெண்கள் கடத்தல்: ஜம்மு-காஷ்மீரில் போராட்டம்
Updated On :28 ஜூன் 2021, 9:22 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் சீக்கிய பெண்கள் இருவரைக் கடத்தி திருமணத்திற்காக கட்டாய மத மாற்றம் செய்த சம்பவத்தைக் கண்டித்து சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வயதான நபர்களுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக இரு பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தில் கட்டாய மத மாற்றத்திற்கு எதிராக சட்டங்கள் வலுவாக்கப்பட்டுள்ளதைப் போன்று யூனியன் பிரதேசங்களிலும் சட்டங்களை வலுவாக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் எஸ் சிர்சா தலைமையில் சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''முதியவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக இரு சீக்கிய சிறுமிகள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு மத மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார். 

மேலும், தலைநகர் ஜம்மு-காஷ்மீரில் கண்டனப் பேரணியில் ஈடுபடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.