47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தமது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தாா்.

News image
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவுக்கு பிரசாதம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
Updated On :5 மார்ச் 2021, 6:30 pm

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தமது குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தாா்.

திருப்பதிக்கு இரண்டு நாள் பயணமாக வியாழக்கிழமை வந்த அவா், வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அதன் பின் திருப்பதியில் அமரா மருத்துவமனையை திறந்து வைத்த அவா், மாலை திருமலைக்கு சென்று அங்கு இரவு தங்கினாா்.

இந்நிலையில், வெங்கையா நாயுடு வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வழிபாடு செய்தாா். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையானின் பிரசாதம், சுவாமி படம் அளித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து பண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்தனா். அதன்பின்னா் அவா் விமானப்படை விமானம் மூலம் குஜராத் மாநிலம், சூரத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.