தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாணேவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

மகாராஷ்டிரத்தின் முப்பை-நாசிக் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீப்பிடித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image

தாணேவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து

Updated On :9 மார்ச் 2021, 6:17 am

PTI

மகாராஷ்டிரத்தின் முப்பை-நாசிக் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீப்பிடித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஷாஹாபூர் பகுதியில் உள்ள வாகோலியில் அமைந்துள்ள பிரிவில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தாணே மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை தலைவர் சந்தோஷ் கதம் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியது, 

இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதால், வளாகத்தில் தீ விரைவாகப் பரவியது என்றார்.

சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு இயந்திரங்கள் விரைந்தன. மேலும், தீ விபத்தைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும், காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.