தெலங்கானாவில் புதிதாக 337 பேருக்கு கரோனா
தெலங்கானாவில் புதிதாக இன்று 337 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Telangana adds 337 fresh COVID-19 cases, 2 deaths push toll to 1,671

Telangana adds 337 fresh COVID-19 cases, 2 deaths push toll to 1,671
தெலங்கானாவில் புதிதாக இன்று 337 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில்,
கடந்த 24 மணி நேரத்தில் 337 பேருக்குத் தொற்று பரவியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 3,03,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரேநாளில் 2 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1671 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2,958 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 10 நாள்களில் பள்ளிகளின் மூலம் அதிக எண்ணிக்கையிலான தொற்று பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 21-ம் தேதி நிலவரப்படி 37,079 சோதனைகள் மேற்கொண்ட நிலையில் நாட்டில் இதுவரை 2,98,826 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...