சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

உத்தரகண்ட் முதல்வருக்கு கரோனா தொற்று

உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்

Updated On :22 மார்ச் 2021, 7:38 am

உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முகக்கவசம், சமூக இடைவெளி, கரோனா பரிசோதனை, கரோனா தடுப்பூசி என மாநிலங்கள் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

அரசியல் தலைவர்கள் சிலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் நிலையில், உத்தரகண்ட் முதல்வர் திரத் சிங் ராவத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

கரோனா பரிசோதனையில் எனக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் நலமாக இருக்கிறேன். எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவர்களின் மேற்பார்வையில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். 

கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளவும்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.