தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இமாச்சலில் ஏப்.4 வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடல்

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக என இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :26 மார்ச் 2021, 2:54 pm

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 4ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக என இமாச்சல் மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் தலைமையில் கரோனா நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவித்தார். எனினும் நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 61 ஆயிரத்து 616 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.