சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த மூவர் கைது

சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் திருடிய ஒரு பெண் உள்பட மூன்று பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த மூவர் கைது
Updated On :27 மார்ச் 2021, 9:28 am

ANI

புது தில்லி: சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் திருடிய ஒரு பெண் உள்பட மூன்று பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், சிபிஐ அதிகாரிகள் என்று கூறும் போலி அடையாள அட்டை வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட வெளிநாட்டுப் பணம், இந்திய ரூபாய், பல லட்சம் மதிப்புள்ள நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், 3852 அமெரிக்க டாலர்கள், 400 இங்கிலாந்து பவுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து, அதில் சிபிஐ அதிகாரிகளாக நடிப்பதைப் போல தாங்களும் சிபிஐ அதிகாரிகள் போல நடித்துக் கொள்ளையில் ஈடுபட்டதாக அவர்கள் மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.