பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாசிக் சந்தைகளில் நுழைவுக் கட்டணம்: கூட்டத்தைக் குறைக்க புதிய வழி

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் காய்கறி உள்ளிட்ட சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடுவதைத் தடுக்கும் வகையில் புதிய வழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image
நாசிக் சந்தைகளில் நுழைவுக் கட்டணம்: கூட்டத்தைக் குறைக்க புதிய வழி
Updated On :30 மார்ச் 2021, 7:06 am

DIN


நாசிக்: கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் காய்கறி உள்ளிட்ட சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் கூடுவதைத் தடுக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, நாசிக்கில் உள்ள எந்த ஒரு சந்தைக்கும் செல்ல பொதுமக்களிடமிருந்து ரூ.5 நுழைவுக் கட்டணமாக வசூலிக்க காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சந்தைகளுக்கு வரும் மக்கள் கூட்டத்தைக் குறைக்க இந்த வழிமுறை பின்பற்றப்படும் என்றும், அவ்வாறு ரூ.5 செலுத்தி சந்தைக்குள் நுழைவோர், ஒரு மணி நேரத்துக்குள் திரும்பிவிட வேண்டும், இல்லாவிட்டால் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாசிக் நகராட்சியால் வசூலிக்கப்படும் இந்த தொகை, சந்தைப் பகுதிகளை கிருமிநாசினியால் தூய்மைப்படுத்துவது உள்ளிட்டப் பணிகளுக்கு செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.