எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஒரேநேரத்தில் மம்தா, அமித் ஷா பிரசாரத்தால் சூடுபிடித்துள்ள நந்திகிராம்

மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஒரேநேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :30 மார்ச் 2021, 8:16 am

DIN

மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் ஒரேநேரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேற்குவங்கத்தில் கடந்த தோ்தல்களில் பவானிபூா் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரும் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் நந்திகிராம் தொகுதியில் களம் காண்கிறார். 

நந்திகிராம் தொகுதியில் கடந்த 3 தோ்தல்களில் திரிணமூல் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றுள்ள நிலையில் மம்தா - சுவேந்து அதிகாரி இடையே போட்டி அதிகரித்துள்ளது.  கடந்த 2016-இல் சுவேந்து அதிகாரி இந்தத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

வரும் தேர்தலில் நந்திகிராம் தொகுதியிலே பாஜக சார்பில் போட்டியிட்டு 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிப்பேன் என்று சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். அவரது சவாலை ஏற்றே மம்தா இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் இன்று நந்திகிராம் தொகுதியில் முதல்வரும், திரிணமூல் கட்சி வேட்பாளருமான மம்தா, தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். 

அதேபோன்று பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்று நந்திகிராம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.  ஏப்ரல் 29 ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.