எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மே 5-ல் முதல்வராக பதவியேற்கிறார் மம்தா

மேற்கு வங்கத்தின் முதல்வராக மே 5-ம் தேதி மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
மம்தா பானர்ஜி
Updated On :3 மே 2021, 12:05 pm

DIN

மேற்கு வங்கத்தின் முதல்வராக மே 5-ம் தேதி மம்தா பானர்ஜி பதவியேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்த நிலையில், சட்ட ரீதியாக மீண்டும் மாநில முதல்வராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவைக் குழு தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், இது தொடர்பாக இன்று (மே 3)  இரவு 7 மணிக்கு ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க மம்தா உரிமை கோரவுள்ளார். 

மேற்கு வங்க சட்டப்பேரவையில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எனினும் தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் முதல்வர் வேட்பாளரான மம்தா பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார்.

சட்டப்பேரவைத் தொகுதியில் தோல்வியடைந்தாலும்,  முதல்வராக பதவியேற்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதால், மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று மம்தா ஆட்சியமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.