வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

அச்சமூட்ட அல்ல; எச்சரிக்கையே: 3-ஆம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம்

நாட்டில் தற்போது கரோனா பேரிடரின் இரண்டாம் அலை கொடுந்தீவிரமடைந்திருக்கும் நிலையில், மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

News image

அச்சமூட்ட அல்ல; எச்சரிக்கையே: 3-ஆம் ஆலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம்

Updated On :7 மே 2021, 6:23 am

DIN


பெங்களூரு: நாட்டில் தற்போது கரோனா பேரிடரின் இரண்டாம் அலை கொடுந்தீவிரமடைந்திருக்கும் நிலையில், மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக தாக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது குழந்தைகளுக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பது கடுமையாக அதிகரித்து வருவதை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை தரப்பில் இந்த எச்சரிக்கைத் தகவல்  வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா பேரிடரைப் போல அல்லாமல் உருமாறிய கரோனா தொற்றின் இரண்டாம் அலையின்போது குழந்தைகளுக்கு கரோனா உறுதியாவது அதிகரித்திருப்பதும், குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிப்பதும் அதிகரிப்பதும் கண்கூடாகத் தெரிகிறது.

இந்த நிலையில், நாட்டில் கரோனா மூன்றாம் அலை நேரிட்டால், குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 - 16 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர், இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படு அதிக வாய்ப்பிருப்பதாகவும், தாய்ப்பால் கொடுப்பதை அனைத்துத் தாய்மார்களும் உறுதி செய்யவும், குழந்தைகளுக்கு போடும் எந்தத் தடுப்பூசியையும் கரோனா அச்சத்தால் விட்டுவிட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல், வாயுக் கோளாறு, சளி போன்றவை குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள். ஒரு வேளை பெரியவர்களுக்கு கரோனா பாதித்துவிட்டால், அவர்கள் கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றாவிட்டால், அவர்கள் மூலம் குழந்தைகளுக்கும் பரவி விடும் அபாயம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அது மட்டுமல்ல, சில குழந்தைகள் கரோனா பாதித்தாலும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பார்கள் அவர்கள் மூலம் வீட்டிலிருக்கும் முதியவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 10 வயதுடைய குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.