இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

உத்தரகண்ட் வருவோருக்கு கரோனா பரிசோதனைச் சான்று கட்டாயம்

உத்தரகண்ட் மாநிலத்திற்குள் நுழைவோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைச் சான்று கட்டாயம் என்று அம்மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

News image

உத்தரகண்ட் வருவோருக்கு கரோனா பரிசோதனைச் சான்று கட்டாயம்

Updated On :10 மே 2021, 8:28 am

ANI

உத்தரகண்ட் மாநிலத்திற்குள் நுழைவோருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனைச் சான்று கட்டாயம் என்று அம்மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது. 

தலைமைச் செயலாளர் ஓம் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 

டெஹ்ராடூன், ஹரித்வார், உதம்சிங்நகர் மற்றும் நைனிடால் ஆகிய இடங்களிலிருந்து உத்தரகண்ட் மாநிலத்திற்குள் வருவோர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைச் சான்று மற்றும் விரைவான ஆன்டிஜென் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 

உத்தரகண்ட்டில் மே 18 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் கடந்த ​​72 மணி நேரத்திற்குள் எடுத்த ஆர்டிபிசிஆர் எதிர்மறை சான்று வைத்திருக்க வேண்டும். மேலும் ஸ்மார்ட் சிட்டி போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்றார். 

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 5,890 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளதாக, மேலும் 180 பேர் பலியாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.