எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

3-ஆவது ஆக்சிஜன் ரயில் தமிழகத்துக்கு இன்று வருகை

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மூன்றாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளது.

News image
Updated On :15 மே 2021, 9:55 pm

DIN

 ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மூன்றாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிற்றுக்கிழமை வரவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதியில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திரவ ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தை இந்திய ரயில்வே தொடங்கியது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், தமிழகத்துக்கு ஆக்சிஜன் நிரப்பப்பட்ட முதல் ரயில் மேற்கு வங்கம் மாநிலம் துா்காபூரில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கு கடந்த 14-ஆம் தேதி வந்தடைந்தது. இந்த ரயிலில் 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது. இதைத் தொடா்ந்து, இரண்டாவது ரயில் ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து திருவள்ளூருக்கு மே 15-ஆம் தேதி காலை வந்தடைந்தது. இந்த ரயிலில் 31.4 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில், ஜாா்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து தமிழகத்துக்கு மூன்றாவது ஆக்சிஜன் ரயில் ஞாயிற்றுக்கிழமை (மே 16) வரவுள்ளது. இந்த ரயிலில் 40 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. இதன்பின், 5 டேங்கா்களை இணைத்து 79 டன் ஆக்சிஜனைக் கொண்ட நான்காவது ரயில் ரூா்கேலாவில் இருந்து திருவள்ளூருக்கும், 5-ஆவது ரயில் ஒடிஸா மாநிலத்தில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கும் கொண்டு வரப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.