பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இமாச்சலில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக இமாச்சலில் அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் மே 31 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
இமாச்சலில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு
Updated On :24 மே 2021, 1:09 pm

DIN

அதிகரித்துவரும் கரோனா தொற்று காரணமாக இமாச்சலில் அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் மே 31 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்து. அதன்படி மே 6ஆம் தேதி முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இந்த பொதுமுடக்கத்தின் போது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், பொது முடக்கத்தை மே 31 வரை நீட்டித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.