புது தில்லி: கரோனா 3-ம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மூன்றாம் அலையில், குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில் தற்போது மத்திய அரசு இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.
அதில், நாட்டில் கரோனா மூன்றாம் அலை, குழந்தைகளை தீவிரமாகத் தாக்கும் என்பதற்கு இதுவரை எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று தெரிவித்துள்ளது.