பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மீண்டும் தில்லிக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து அண்டை மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தில்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

News image
கோப்புப்படம்
Updated On :27 மே 2021, 9:41 am

DIN

கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து அண்டை மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தில்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து சென்ற அவலங்கள் எல்லாம் அரங்கேறியது. 

இதேபோன்று தலைநகர் தில்லியில் கடந்த மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தில்லியிலிருந்து சொந்த ஊருக்குச் சென்றனர். 

இந்நிலையில் தில்லியில் தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து  அவர்கள் மீண்டும் தில்லிக்கு நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர். கரோனா பரவல் குறைந்துவிட்டதால் எனது வாழ்வாதாரத்திற்காக மீண்டும் தில்லிக்குச் செல்வதாக புலம்பெயர் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.