மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிகாா்: கள்ளச் சாராயத்துக்கு மேலும் இருவா் பலி

பிகாரில் கள்ளச் சாராயத்துக்கு மேலும் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த சில நாள்களில் அங்கு கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2021, 6:48 pm

DIN

பிகாரில் கள்ளச் சாராயத்துக்கு மேலும் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த சில நாள்களில் அங்கு கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே, கோபால் கஞ்ச், மேற்கு சம்பாரண், சமஸ்திப்பூா் ஆகிய மாவட்டங்களில் 40 போ் உயிரிழந்த நிலையில், இப்போது முசாஃபா்பூா் மாவட்டம் சிரஸ்யா கிராமத்தில் மேலும் இருவா் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தனா்.

பிகாரில் கடந்த 2016 ஏப்ரல் முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது. எனினும், கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதை முழுமையாகத் தடுக்க முடியவில்லை. எனவே, அவ்வப்போது கள்ளச் சாராயம் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், கடந்த சில நாள்களில் தீபாவளி பண்டிகை காரணமாக கள்ளச் சாராய விற்பனை அதிகரித்தது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடா்கதையாகி வருகிறது.

இது தொடா்பாக முசாஃபா்பூா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயந்த் காந்த் கூறுகையில், ‘சிரஸ்யா கிராமத்தைச் சோ்ந்த அந்த இருவரும் கள்ளச் சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே சுருண்டு விழுந்தனா். பின்னா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். அப்பகுதியில் கள்ளச்சாராயம் தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்கள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.