சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காற்று மாசு: தில்லி பொதுப் போக்குவரத்தில் கூடுதல் தளர்வுகள்?

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க கோரி கைலாஷ் கெஹ்லோட் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

News image
காற்று மாசு
Updated On :16 நவம்பர் 2021, 12:33 pm

DIN

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்க கோரி பேரிடர் மேலாண் ஆணையத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த சில நாள்களாக தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகளவிலான வாகனங்கள் இயக்கம், தொழிற்சாலைகள், பயிர்க்கழிவுகள் எரிப்பு காரணமாக கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக தில்லியில் பேருந்து, மெட்ரோ ரயில்களில் பயணிகல் நின்று பயணம் செய்ய தில்லி பேரிடர் மேலாண் ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்கக் கோரி அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் செய்து பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கவும் அந்த கடிதத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.