மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

100 நாடுகளுக்கு 6.5 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி: பிரதமர் மோடி

ஏறத்தாழ 100 நாடுகளுக்கு 6.5 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 4:27 pm

DIN


ஏறத்தாழ 100 நாடுகளுக்கு 6.5 கோடி கரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.

மருந்தக துறையின் முதல் உலகளாவிய உச்சி மாநாட்டை பிரதமர் மோடி வியாழக்கிழமை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் ஏறத்தாழ 100 நாடுகளுக்கு இந்தியா 6.5 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளதாகக் கூறினார்.

அவர் மேலும் பேசியது:

"வாழ்வியல் முறை அல்லது மருந்துகள் அல்லது மருத்துவத் தொழில்நுட்பம் அல்லது தடுப்பூசி என எதுவாக இருந்தாலும், உடல் ஆரோக்கியம் சார்ந்த அனைத்துத் துறைகளும் கடந்த 2 வருடங்களில் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளன.

இந்த சூழலில் இந்திய மருந்தகத் துறை சவாலுக்கு ஏற்ப உயர்ந்துள்ளது. இந்திய சுகாதாரத் துறை சம்பாதித்துள்ள உலகளாவிய நம்பிக்கை சமீப காலங்களில் இந்தியாவை 'மருந்தக உலகம்' என்று அழைப்பதற்கு வழிநடத்தியுள்ளது.

பெருந்தொற்றின் தொடக்க காலத்தில் உயிர் காக்கும் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். இந்தாண்டு 6.5 கோடி கரோனா தடுப்பூசிகளை ஏறத்தாழ 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம்" என்றார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.